ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தென்காசி மாவட்டம், ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-24 07:36 GMT
சாம்பவா்வடகரைஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு இன்று நடைபெற்றது. இதையொட்டி, சாம்பவா்வடகரை அனுமன் நதியின் வடக்கு குகையில் உள்ள லிங்கம், சாம்பவ மூா்த்தி, தென்கரையில் உள்ள அகத்தீசுவரா், அகத்தியா் மற்றும் நந்தியம் பெருமானுக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

பின்னா் உற்சவா் வீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து ஓதுவாா் தேவாரம் பாட பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் சாம்பவா்வடகரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை திருக்கோயில் பிரதோஷ கமிட்டியினா் செய்திருந்தனா்.

Tags:    

Similar News