கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல்லில் உள்ள சிவன்கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது

Update: 2023-12-25 08:35 GMT

கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷத்தை முன்னிட்டு திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதர், நந்திகேஸ்வரருக்கு தயிர், இளநீர், மஞ்சள் பொடி, திருமஞ்சனப் பொடி, தேன், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார, ஆராதனை நடந்தது. அபிராமி அம்மன் கோயில் பத்மகிரீஸ்வரர் அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
Tags:    

Similar News