தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை சார்பாக மழை வேண்டி தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை சார்பாக மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Update: 2024-05-04 14:07 GMT

சிறப்பு தொழுகையில் ஈடுபட்டவர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகர கிளை ஒன்று சார்பாக கிளையின் சார்பாக மழைத் தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் குளங்களில் தண்ணீர் இல்லாமல் வற்றிவிட்டது.

வீடுகளில் உள்ள போர்களிலும் தண்ணீர் குறைந்து விட்டது.இதனால் விவசாயங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இக்காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் மழை இல்லாத காலங்களில் சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். அவர்களைப் பின்பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை நகர கிளை 1 சார்பாக நிஜாம் பள்ளிக்கூடம் வளாகத்தில் சனிக்கிழமை காலை 6:45 மணி அளவில் மழைவேண்டி சிறப்பு தொழுகை திடலில் நடைபெற்றது.

இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் கிளை தலைவர் பீர் முகம்மது,செயலாளர் முகம்மது ஆசிப்,பொருளாளர் சையது மசூது மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News