விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி ஆரணி தர்காவில் பிரார்த்தனை

Update: 2023-12-06 09:41 GMT

தர்காவில் பிரார்தனை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேமுதிக கட்சி நிறுவனர் விஜயகாந்த் உடல்நலம் பூரண குணமடைய திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாரதியார் தெருவில் உள்ள தர்காவில் திங்கட்கிழமை தேமுதிக கட்சியினர் கூட்டு பிரார்த்தனை நடத்தினர். தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் பூரண குணமடைய பாரதி யார் தெருவில் உள்ள தர்கா வில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் டி.பி.சரவணன் தலைமையில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திருவண்ணா மலை வடக்கு மாவட்ட பொருளாளர் ஜான் பாஷா, ஆரணி தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் திருஞானம், ஆரணி நகர செயலாளர் ஜெ.சுந்தர்ராஜன், ஆரணி ஒன்றிய செயலாளர் கள் இளங்கோவன். அருள்தாஸ், செந்தில் வந்தவாசி மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், போளூர் மாவட்ட துணைச் செயலாளர் சங்கர். மாவட்ட தொழிற்சங்க துணைச் செயலாளர் பார்த்திபன், நகர நிர்வாகிகள் ஜெய சீலன். சடையாண்டி, பிச்சாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News