தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தால் பரபரப்பு

திருச்செங்கோடு வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-06 15:08 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் உப்பிலிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் கோகிலாவை பணி இறக்கம் செய்து வட்டார கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது, இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று வட்டார கல்வி அலுவலக அதிகாரிகளிடம் பெருந்திரள் மனு வழங்கும் போராட்டம் நடைபெற்றது

ஏற்கனவே கடிதம் கொடுத்தும் இன்று காலை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் மாலை வருவதாக தெரிவித்தும் அதிகாரிகள் அலுவலகத்தில் இல்லாமல் சாக்குப் போக்கு சொல்லி உள்ளனர் இதனால் ஆக்கிரமடைந்த ஆசிரியர்கள் 30க்கும் மேற்பட்டோர் அலுவலக வளாகத்தில் குழுமி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்,காத்திருப்பு போராட்டம் குறித்து தகவல் அறிந்த வட்டார கல்வி அலுவலர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு வந்து மனுக்களை பெற்றுக் கொண்டதால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது, இந்த போராட்டம் காரணமாக வட்டார கல்வி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

Similar News