புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்

புதிய பள்ளிக் கட்டிடத்தை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2023-12-26 16:05 GMT

பள்ளி கட்டிடங்கள் திறப்பு

அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட மீமிசல் ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளியில் சுமார் 130 குழந்தைகள் பயின்று வருகின்றன.

அப்பள்ளியில் போதிய கட்டிட வசதி நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில் தமிழக முதல்வர் பதவியேற்ற உடன் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் பல்வேறு பகுதிகளில் திறந்து வைத்து வருகிறார் .

அதன் ஒரு பகுதியாக இன்று தமிழகத்தில் பல்வேறு பள்ளிகள் காணொளி மூலம் திறக்கப்பட்டதில் மீமிசல் தொடக்கப்பள்ளி ஒன்று இந்த பள்ளியின் கட்டிடம் வைத்து சுமார் 28 லட்சம் செலவில் வண்ண வண்ண ஓவியங்கள் பள்ளி வகுப்பறைக்குள் வரையப்பட்டு தனியார் பள்ளிக்கு இணையாக திறக்கப்பட்டது பள்ளி கட்டிடத்தை ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் புவனேஸ்வரி நரசிம்மன் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் ஒன்றிய குழு உறுப்பினர் அய்யா ரமேஷ்,புதுக்கோட்டை தெற்கு திமுக. மாவட்டபொருளாளர் உதயம் தாகீர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகதீஷ் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கிராம தலைவர் ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News