ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி உயிரிழப்பு

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-04-05 14:42 GMT

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி உயிரிழந்தால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மதுரை மாவட்டம் மதிச்சியம் என்ற பகுதியில் கார்த்திக் (30) என்பவர் வசித்து வந்துள்ளா இவர் மீது காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் வழிப்பறி வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் போலீசாரால் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மருத்துவ தகுதிச் சான்று வழங்கப்பட்ட பின்ன மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 4) திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 5)காலை உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கூறி மருத்துவமனை பிணவறை பகுதியில் இன்று மதியம் அவரது ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News