சுங்க சாவடியில் சிறை பிடிக்கப்பட்ட தனியார் பேருந்து

திண்டுக்கல்லில் உரிய வழித்தடத்தில் பேருந்து போகாததால் ஆத்திரம் அடைந்த மக்கள் தனியார் பேருந்தத முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-15 07:31 GMT

சுங்க சாவடி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மயநாயக்கனூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை சென்ற நிலையில் வீடு திரும்புவதற்காக தனியார் பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது அம்மநாயக்கனூர் , கொடைரோடு பேருந்து நிலையங்களுக்கு பேருந்து செல்லாது எனவும், திண்டுக்கல்- மதுரை தேசிய நான்கு வழிச்சாலை வழியாகத்தான் செல்லும் எனவும் தனியார் பேருந்து நடத்துநர் கூறியுள்ளார். மேலும் முருகேசனை கொடைரோடு சுங்கச்சாவடியில் இறக்கி விட்டனர். இதுகுறித்து முருகேசன் அளித்த தகவலின் படி ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து சுங்க சாவடிக்கு வந்து தனியார் பேருந்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலந்து போக செய்தனர்.
Tags:    

Similar News