அரக்கோணத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு!

போக்குவரத்து துறை சார்பில் அரக்கோணம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக வளாகம் அருகே தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடைபெற்றது.

Update: 2024-05-17 17:05 GMT
வாகனங்கள் ஆய்வு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் அரக்கோணம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக வளாகம் அருகே தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடைபெற்றது. அரக்கோணம் மோட்டார் வாகன ஆய்வாளர் செங்கோட்டுவேல் தலைமை தாங்கினார். அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, அரக்கோணம் டி.எஸ்பி வெங்கடேசன், ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், மாவட்ட கல்வி அலுவலர் மோகன், ராணிப்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டு அரக்கோணம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்த 100 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் வாகனங்களின் அமைப்பு, படிக்கட்டுகள், ஜன்னல்கள், அவசர வழி உள்ளிட்ட வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்தனர்.

மேலும் வாகனங்களில் தீயணைப்பு கருவி, முன்புறம், பின்புறம் கண்காணிப்பு கேமரா, ஜி.பி.ஆர்.எஸ். இணைப்பு, புத்தகங்கள் வைக்கும் அலமாரிகள், முதலுதவி பெட்டி, வேகக் கட்டுப்பாட்டு கருவிகள், பிரதிபலிப்பான் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளனவா என்றும் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் 13 வாகனங்களில் பல்வேறு சிறு குறைகள் இருந்ததால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வாகனங்களில் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்ட பின் மீண்டும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்து ஆய்வு முடிக்கப்பட்ட பின் உரிய சான்றிதழ் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News