தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி நர்சிங் கல்லூரி மாணவர்கள் இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-12-06 12:17 GMT

பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி நர்சிங் கல்லூரி மாணவர்கள் இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கோவை: பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி நர்சிங் கல்லூரி மாணவர்கள் இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சரவணம்பட்டி பகுதியில் பிபிஜி நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது.இங்கு பயிலும் மாணவ மாணவிகள் கடந்த இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரியில் அடிப்படை வசதி இல்லை எனவும் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களை இரண்டாம் ஆண்டிற்கான கல்லூரி கட்டணத்தை செலுத்த சொல்லி நிர்பந்தம் செய்வதாகவும் இரண்டாம் ஆண்டிற்கான கட்டணத்தை முதலாம் ஆண்டிலேயே கட்டினால் தான் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என நிர்வாகம் தரப்பில் கூறுவதாக குற்றம் சாட்டினர்.கட்டணம் கட்டத்தவறும் மாணவ மாணவிகளுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.50-300 வரை அபராதம் வசூலிப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News