வள்ளவிளையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

250 பேர் தேர்வானார்கள். 30 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Update: 2023-12-18 04:59 GMT
வேலை வாய்ப்பு முகாமை துவக்கிய அமைச்சர் .
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர்  தொகுதிக்குட்பட்ட வள்ள விளை  புனித மரியன்னை தேவாலய வளாகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. ஆலய பங்குப் பணியாளர் ரிச்சர்ட் சக்கரியா தலைமை வகித்தார்.         பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக விஜய் வசந்த் எம் பி, ராஜேஷ்குமார் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த முகாமில் 28 நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்தனர். இதில் 250 பேர் தேர்வானார்கள். 30 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News