தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்; காவல்துறையினர் அதிரடி ஆய்வு

திருவாரூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக காவல்துறையினர் அதிரடி ஆய்வு நடத்தினர்.

Update: 2023-12-12 14:59 GMT

திருவாரூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக காவல்துறையினர் அதிரடி ஆய்வு நடத்தினர். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்டம் முழுவதும் பான்மசாலா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை அடியோடு ஒழிக்கும் வகையில் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழு அமைத்து பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகை கடைகள் ஆகியவற்றை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி, தனிப்படை அமைக்கப்பட்டது. இன்று மாவட்டத்தில் பெட்டி கடைகளில் பான் மசாலா மற்றும் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனைக்கு உள்ளதா என காவல்துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
Tags:    

Similar News