தேர்தல் விதிமீறல் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை !

தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்ற தேர்தல் விதிமீறல் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-08 09:32 GMT

மாவட்ட நிர்வாகம் 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்ற தேர்தல் விதிமீறல் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மாவட்ட நிர்வாகம் தகவல். 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தக்கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விரும்புவோர் 1800-425-9188 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04328-299166 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இதில், தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ஏப்ரல் ஆறாம் தேதி இன்று வரை தொலைபேசி வாயிலாக 13 புகார்களும், cVIGIL என்ற மொபைல் செயலியின் மூலம் 05 புகார்களும் வரப்பெற்றுள்ளது.

இந்த புகார்கள் அனைத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளது , எனவே, தேர்தல் விதிமுறைகள் தொடர்பான புகார்களை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கும் தொலைபேசி வாயிலாகவும், cVigil என்ற மொபைல் செயலின் மூலமாகவும் தெரிவிக்கலாம். என்ன மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News