பேரூராட்சி செயலருக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பேரூராட்சி செயலருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

Update: 2023-12-23 12:00 GMT

பேரூராட்சி செயலருக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சியில், மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம் நடைபெற்ற திருமண மண்டபத்தின் முன், பேரூராட்சி செயலா் அலுவலருக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் சக்திவேல் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, கன்னிவாடி பேரூராட்சிக்கு வரும் பொதுமக்ககளை ஒருமையில் பேசி அலைக்கழிக்கும் பேரூராட்சி செயலருக்கு எதிராகவும், பேரூராட்சியில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளை விசாரிக்கக் கோரியும், பேரூராட்சி செயல் அலுவலரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.
Tags:    

Similar News