நடுரோட்டில் ஓடவிட்டு சுட வேண்டும் - கொந்தளித்த வாலிபர் சங்கம்

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

Update: 2024-03-12 12:04 GMT

புதுச்சேரி சிறுமிக்கு நீதிக்கேட்டு ஆர்ப்பாட்டம்

 புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக திருப்பத்தூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் தலைமையில் புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கத்தை கண்டித்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ப்இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முக்கிய பொறுப்பாளர்கள் சிறுமியின் கொலை சம்பந்தமான குற்றவாளிகளுக்கு நடுரோட்டில் ஓட ஓட சுட்டு வீழ்த்த வேண்டும் என்பது போன்ற கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அந்த தண்டனையை பார்க்கின்றவர்கள் இது போன்ற தவறு செய்யக்கூடாத அளவிற்கு அந்த தண்டனை இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்த்இனர்.

மேலும் தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சாவை கட்டுப்படுத்த வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்‌. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தொண்டர்கள் என சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News