ஓய்வு பெற்ற ஆசிரியர் நல சங்கத்தினர் போராட்டம்

சங்கரன்கோவிலில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் நலச் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்றது

Update: 2023-10-31 11:35 GMT

ஒய்வுபெற்ற நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் நலச் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்றது இந்த தர்ணா போராட்டத்தில்ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவஞானம் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மேலும் இப் போராட்டத்தில் 70 வயதில் 10% ஊதிய உயர்வு, CPS திட்டத்தை ரத்து செய்தல், மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண கட்டணச் சலுகை மற்றும் கட்டணமில்லா மருத்துவ காப்பீட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் தென்காசி மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News