பந்தம்பாளையம் கிராமத்தில் மனமகிழ் மன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம்

அவிநாசி வட்டம் சேவூர் ஊராட்சி பந்தம்பாளையம் கிராமத்தில் மனமகிழ் மன்றத்தை மூட வலியுறுத்தி கிராம மக்கள், விவசாயிகள் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மனமகிழ் மன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2024-01-02 15:24 GMT

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பந்தம்பாளையம் கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி இரண்டு முறை நடைபெற்ற போராட்டங்களில் சம்பந்தப்பட்ட மனமகிழ் மன்றத்தை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அதிகாரிகள் மூன்று மாதங்களாகியும்

மனமகிழ் மன்றத்தை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியும் உடனடியாக மனமகிழ் மன்றத்தை மூட வலியுறுத்தியும், மூடும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக கூறியும் சேவூர்,

வேட்டுவபாளையம் மற்றும் முறியாண்டம்பாளையம் என 3 கிராமத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனமகிழ் மன்றம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News