100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தக்கோரி ஆர்பாட்டம்

கீழ்வேளூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தக்கோரி ஆர்பாட்டம் நடந்தது.

Update: 2024-06-29 05:16 GMT

கீழ்வேளூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தக்கோரி ஆர்பாட்டம் நடந்தது. 

கீழ்வேளூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர்  சார்பில் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், ஊதியமாக ரூ. 600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி    நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம .வெண்மணி, இருக்கை, வண்டலூர், வடக்காலத்தூர், , ராதாமங்கலம், காக்கழனி வெண்மணி சாட்டியக்குடி, ஆதமங்கலம் உள்ளிட்ட 13 பகுதிகளில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர.
Tags:    

Similar News