கிருஷ்ணகிரியில் காக்கி உதவும் கரங்கள்’ சார்பில் நிதியுதவி வழங்கல்

கிருஷ்ணகிரியில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்தினருக்கு, ‘காக்கி உதவும் கரங்கள்’ சார்பில் ரூ.25.49 லட்சம் நிதி எஸ்பி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

Update: 2024-06-20 09:06 GMT

ஓசூர் அருகே பாகலூர் காவல் நிலையத்தில் ஏட்டாக ராஜேந்திரன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவால் கடந்தாண்டு அவர் உயிரிழந்தார்.இதையடுத்து, கடந்த 2011 ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள், ‘காக்கி உதவும் கரங்கள்’ குழு மூலம் ரூ.25.49 லட்சம் நிதி திரட்டினர்.

இதையடுத்து, ராஜேந்திரனின் மகன்களான முகுந்த் அகிலேஷ் (5) பெயரில் ரூ.11,47,410 மற்றும் சம்ருத் (3) பெயரில் 11,47,253 காப்பீடு செய்தனர். மேலும், ரூ,2,54,831 காசோலை எடுத்தனர்.கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜூன் 19ஆம் தேதி 12 மணி அளவில் நடந்த நிகழ்ச்சியில், உயிரிழந்த ராஜேந்திரனின் குடும்பத்தினரிடம், காப்பீடு பத்திரம் மற்றும் காசோலையை எஸ்பி தங்கதுரை வழங்கினார்.

Tags:    

Similar News