மறைமலநகரில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கல்
மறைமலநகரில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2024-01-19 15:52 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைபள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதசதனன் இன்று கலந்து கொண்டு 54 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கினார் .
உடன் மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம், துணை தலைவர் சித்ரா கமலக்கண்ணன், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆப்பூர் சந்தானம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், p ஆசிரியர்கள்,வார்டு உறுப்பினர்கள்,மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.