மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குதல்

வையம்பட்டி ஒன்றியம் இளங்காக்குறிச்சி அரசு பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

Update: 2024-01-26 09:30 GMT


வையம்பட்டி ஒன்றியம் இளங்காக்குறிச்சி அரசு பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி வையம்பட்டி ஒன்றியம் இளங்காக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்திய நாட்டின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ண கொடியை ஏற்றி வைத்து தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மணப்பாறை MLA ப. அப்துல் சமத் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

இதில் ஒன்றிய பெருந்தலைவர் குணசீலன், வட்டார வளர்ச்சி அலுவலர், திமுக ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் சபியுல்லா, மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன், ஊராட்சி மன்ற தலைவர், தலைமை ஆசிரியர், உள்ளிட்ட ஆசிரியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News