சித்தாத்தூரில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்

சித்தாத்தூர் உள்ளிட்ட 8 பள்ளிகளை சேர்ந்த 611 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை எம்எல்ஏ ஓ ஜோதி வழங்கினார்.

Update: 2024-01-07 09:06 GMT

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல் 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதி உட்பட்ட சித்தாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் தமிழக அரசின் சார்பில் 2023-2024 ஆம் ஆண்டு 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார். வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்து கொண்டு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கி தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.

தொடர்ந்து இதே போல நெடும்பிறை, பல்லி, மேனலூர், புன்னை புதுப்பாளையம், மாமண்டூர், உக்கல் மற்றும் ஆக்கூர் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 -ஆம் வகுப்பு பயிலும் 611 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் ஒ.ஜோதி எம்.எல்.ஏ வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் என்.சங்கர், வெம்பாக்கம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் ஜே.சி.கே.சீனிவாசன், வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.தினகரன், நகர கழக செயலாளர் கே.விஸ்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தெய்வமணி அயலக அணி செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News