சங்ககிரி அருகே தார் சாலை அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

சங்ககிரி அருகே தார் சாலை அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-02-28 08:51 GMT

சங்ககிரி அருகே தார் சாலை அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சிகுட்பட்ட 11 வது வார்டு கஸ்தூரிபட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து எல்லக்குட்டு வரை 1 கிலோ மீட்டர் தூரம் தார் சாலை புதுப்பிக்க கடந்த அக்டோபர் மாதம் பூமி பூஜை செய்து ஓர் அடுக்கு ஜல்லி அமைத்தனர். ஆனால் 5 மாதமாகியும் தார் சாலை அமைக்காதால் அந்த வழியாக செல்லும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சறுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது.

மேலும் பிரசித்தி பெற்ற பூ முனி சாமி கோவிலுக்கு கயிறு கட்டச் செல்லும் நபர்கள் வாகனங்களில் செல்லும் பொழுது தவறி பள்ளத்தில் விழும் நிகழ்வு அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன் சாலையை உடனடியாக அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News