கழிவு நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

திருவேங்கடம் நிச்சபநதி கால்வாயில் சாக்கடை கால்வாய் வழியாக கழிவுநீர் வெளியேற வழி இல்லாததால் அப்பகுதியிலுள்ள நெல் வயல்களில் பாய்ந்து சுகாதாரக்கேடு உண்டாகிறது.

Update: 2024-07-03 13:16 GMT

 திருவேங்கடம் நிச்சபநதி கால்வாயில் சாக்கடை கால்வாய் வழியாக கழிவுநீர் வெளியேற வழி இல்லாததால் அப்பகுதியிலுள்ள நெல் வயல்களில் பாய்ந்து சுகாதாரக்கேடு உண்டாகிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் நிச்சபநதி கால்வாயில சாக்கடை கால்வாய் வழியாக கழிவுநீர் வெளியேற வழி இல்லாததால் அப்பகுதியிலுள்ள நெல் வயல்களில் பாய்ந்து பயிர்கள் கருகியது. இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு கால்வாயில் உள்ள கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News