ஆபத்தான நிலையில் மின்கம்பம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-04-21 07:50 GMT

மின் கம்பம் பழுது

தூத்துக்குடி மாநகராட்சி 15 வார்டு கோரம்பள்ளம், சோரீஸ்புரம், இபி காலனி பகுதியில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. மின்பழுது எதுவும் ஏற்பட்டால் மின் ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி பழுது பார்க்க முடியாத நிலையில் அந்த மின்கம்பம் உள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கும் முன்பாக பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

Similar News