வந்தவாசியில் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம்

வந்தவாசி தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழா, பொதுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-22 14:43 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

 திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளாரில், முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் மு.எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

  மாவட்ட கழக அவைத்தலைவர் டிகேபி மணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் ஒன்றிய கழக செயலாளர் டி.வி பச்சையப்பன் முன்னிலை வகிக்க சிறப்பு அழைப்பாளர்களாக, கழக அமைப்புச் செயலாளரும்,

முன்னாள் அமைச்சருமான முக்கூர் என்.சுப்பிரமணியன் கழக அமைப்புச் செயலாளரும், மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான வாலாஜாபாத் பா.கணேசன் கழக செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் ச.கல்யாண சுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந் நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் ஜி.செல்வராஜ் வெம்பாக்கம் எஸ்.திருமூலன் அனக்காவூர் சி.துரை மாவட்ட கழக பொருளாளர் ஆலத்தூர் சுப்பராயன் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருள் மாவட்ட மாணவரணி செயலாளர் அரவிந்தன் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் பூக்கடை கோபால் அம்மா பேரவை செயலாளர் பாராசூர் பெருமாள் நகர கழக செயலாளர்கள் வந்தவாசி ஓட்டல் பாஷா செய்யாறு கே.வெங்கடேசன் அவைத்தலைவர் ஜனார்த்தனம் வந்தவாசி நகர அம்மா பேரவை செயலாளர் மேகநாதன் நகர அவைத்தலைவர் இளவழகன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மணிவாசன் சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் ரோசிலின் கோவர்த்தனன் அண்ணா தொழிற் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.அருணாச்சலம் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News