மக்கள் தொடர்பு முகாம் - ரூ.68.51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

குப்பணாபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.68.51லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வழங்கினார்.

Update: 2023-12-14 03:50 GMT

நலத்திட்ட உதவிகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம், குப்பணாபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் மொத்தம் 214 பயனாளிகளுக்கு ரூ.68,51,461 மதிப்பிலான அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கி தெரிவித்ததாவது: உங்கள் கிராமத்திற்கு நேரடியாக வந்து கோரிக்கை மனுக்களை பெற்று விரைந்து தீர்வு காண்பதற்கு மக்கள் தொடர்பு முகாம் வாய்ப்பாக அமையும். என்றார்.‌ இம்முகாமில் கயத்தார் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மாணிக்கராஜா, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், கயத்தார் வட்டாட்சியர் நாகராஜன், குப்பணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துலட்சுமிவீரபாண்டியன், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சண்முகத்தாய் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News