வதுவார்பட்டி ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

Update: 2023-12-14 01:29 GMT

மக்கள் தொடர்பு திட்ட முகாம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வதுவார்பட்டி ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் 43 பயனாளிகளுக்கு ரூ.25,80,000/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், 69 பயனாளிகளுக்கு ரூ.24,15,000/- மதிப்பிலான (படிவம்-11) வீட்டுமனைப்பட்டாக்களையும், 30 பயனாளிகளுக்கு ரூ.18,50,000/- மதிப்பிலான முழுப்புலம் பட்டா மாறுதல் ஆணைகளையும், 13 பயனாளிகளுக்கு ரூ.12,00,000/- மதிப்பிலான உட்பிரிவு பட்டா மாறுதல் ஆணைகளையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பயனாளிக்கு ரூ.1,44,000/- மதிப்பிலான முதியோர் உதவித்தொகைகளையும் என மொத்தம் 168 பயனாளிகளுக்கு ரூ.84.59 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.
Tags:    

Similar News