புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி புகார்

மதுபான கொள்முதலில் 60% கணக்கில் வருவதாகவும் 40%-த்தில் முறைகேடு நடப்பதாகவும் இந்த பணத்தில் தான் தேர்தல் பட்டுவாடா நடைபெறுவதாக குற்றம் சாட்டினார்.

Update: 2023-10-20 12:36 GMT

கிருஷ்ணசாமி


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் இன்று தென்காசி சட்டமன்ற தொகுதி கிளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் வாக்கு சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக மதுபான கொள்முதலில் 60% கணக்கில் வருவதாகவும் 40%-த்தில் முறைகேடு நடப்பதாகவும் இந்த பணத்தில் தான் வாக்காளர்களுக்கு தேர்தல் பட்டுவாடா நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். இந்த நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்கள் முள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News