காதலர்களுக்கிடையே பிணக்கு - பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதில் படுகாயம்

மயிலாடுதுறையில் காதலன் வேறு ஒரு பெண்ணுடன் பழகியதால் காதலர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2024-05-10 06:13 GMT

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(24 )இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா மயிலாடுதுறை அரசு  மகளிர் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பொருளாதாரம் பயின்று வருகிறார். இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்தது தொடர்பாக இருவரிடமும் பிரச்சனை நிலவியதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் (9-5-24) ஆகாஷ், சிந்துஜா ஆகிய இருவரும் பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு மாலையில் மயிலாடுதுறைக்கு பல்சர் இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்துள்ளனர். அப்போது ஆகாஷ் பழகி வரும் பெண்ணிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளகூடாது என்று சிந்துஜா கூறியதற்கு ஆகாஷ் மறுப்பு தொவித்ததாக கூறப்படுகிறது. இருவரும் மயிலாடுதுறை நகர் வந்து போது பாலக்கரை என்ற இடத்தில்,  தனக்கு துரோகம் செய்ததால்  மனம் உடைந்த சிந்துஜா ஏற்கனவே தனது பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை கண் இமைக்கும் நேரத்தில் தன் மீது ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார். அந்த தீ இருவர் மீதும் பற்றி எரிந்துள்ளது. பலத்த தீ காயங்களுடன் கீழே விழுந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.. ஆகாஷ் 60 சதவிகிதமும், சிந்துஜா 40 சதவிகிதமும் தீக்காயம் அடைந்ததால் இருவரையும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டபோதுதொடர்ந்து இருவரிடமும்  மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் வாக்குமூலம் பெற்றுள்ளார்  அடுத்து இருவரும் மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சையின் போது சிந்துஜா வலி பொறுக்க முடியாமல்  அலறியப்படியே இருந்தது பரிதாபமாக காட்சி தந்தது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு பெண்ணுக்கு மேல் காதலித்து ஏமாற்றும் இளைஞர்களுக்கு பெரும் அதிர்ச்சியை படுத்தி உள்ளது.

Tags:    

Similar News