ராகுல்காந்தி தடுப்பை தாண்டி சென்றது போக்குவரத்து விதிமீறல்:அண்ணாமலை

பணபலத்தை வைத்து திமுக வெற்றி பெற முடியும் என நம்புகிறது என்றும் இதை உடைத்தெறிவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-16 16:36 GMT

செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரான அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.பாப்பம்பட்டி,அப்பநாயக்கன்பட்டி, சுல்தான்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை 2024 இல் உலகிற்கு மோடி தேவைப்படுகிறார் எனவும் கோவையில் இருந்து,

தாமரையை பாராளுமன்றத்திற்கு மக்கள் அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் மக்கள் அதிக அளவில் தேசியத்தின் பக்கம் உள்ளனர் என்றவர் மோடிக்கு மட்டுமே பிரதமர் நாற்காலியில் அமர தகுதி உள்ளது என்றார். விளக்குகளை அனைத்து விட்டு 500 ரூபாய் கொடுப்பதாக சொல்கிறார்கள் தங்க சுரங்கத்தையே கொட்டினாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் 500 முதல் 600 கோடி செலவு செய்ய இங்கு இரண்டு திராவிட கட்சிகளும் அமர்ந்து இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

பின்னர் அய்யம்பாளையம் பகுதியில் உணவு இடைவேளையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை ஆனைமலை - நல்லாறு திட்டத்திற்கு பெரிய எதிர்ப்பு இல்லை எனவும் திட்டத்திறற்கான வரைவு அறிக்கை தயார் செய்யவே 10,000 கோடி செலவாகும் என்பதால் பிரதமரை சந்தித்து பா.ஜ.க வேட்பாளர்கள் நீலகிரி,திருப்பூரில் வென்றவுடன் உறுதியாக செயல்படுத்தப்படும் என்றார்.

சூலூர் சுற்று வட்டார கிராமங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் வாழ முடியாது நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நீர் நிலை வற்றி உள்ளது எனவும் நிலத்தடி நீர் 1000 அடிக்கு கீழ் உள்ளதால் ஆனைமலை-நல்லாறு திட்டம் மட்டுமே இதற்கு தீர்வு எனவும் பாஜக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றார். ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது என்பது போக்குவரத்து விதி மீறல் எனவும் இதுவே அண்ணாமலை என்றால்,

தி.மு.க வும் கோவை காவல்துறை கிளம்பி வருவார்கள் என்றவர் மூத்த அரசியல் தலைவர் ராகுல் காந்தியின் செயல் இளைஞர்களுக்கு என்ன கருத்தை சொல்கிறது என கேள்வி எழுப்பினார். அண்ணாமலைக்கு ஒரு நியாயம் ராகுல்காந்தி ஒரு நியாயம் என்றவர் ராகுல்காந்தி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டத்தை நிலைநாட்டும் போது தான் சட்டத்தின் மீது மரியாதை வரும் என்றார்.

ராகுல்காந்தி வயநாட்டிற்கு செல்லும் போது கம்யூனிஸ்ட் எதிர்கின்றனர் எல்லைத் தாண்டி இங்கு வந்தால் நண்பர் என்கின்றனர் இது தான் இண்டி கூட்டணியின் நிலை எனவும் ஸ்டாலினுக்கு அவர் மீது நம்பிக்கை இல்லாததால் தான் ராகுல்காந்தி அழைத்து வந்ததாகவும் அண்ணாமலையை தோற்கடிக்க தி.மு.க கோவையில் போட்டியிட்ட நிலையில் தோற்கடிக்க முடியாது என்பதால் ராகுல்காந்தியை அழைத்து வந்தாக தெரிவித்தார்.

கோவை மக்களின் அன்பு மோடிக்கு உள்ளது எனவும் 60% வாக்குகள் பாஜகவிற்கு கிடைக்கும் என்ற அவர் அதிமுக தொண்டர்கள் பலர் பாஜக வில் இணைந்து உள்ளதாகவும் சூலூர்,பல்லடம் பகுதிகளில் அதிமுகவை சேர்ந்த முக்கியமானவர்கள் பா.ஜ.க பக்கம் வந்து களத்தில் வேலை செய்து வருவதாகவும் அதிமுகவின் நிலையை அவர்கள் ஏசியில் இருந்து வெளியே வந்து எட்டி பார்க்க வேண்டும் என்றார்.தேசிய தேர்தல் பிரதமருக்கான தேர்தல் எனவும் பிரதமர் வேட்பாளர் இல்லாமல் ஓட்டி வருகின்றனர் என்ற அ.தி.மு.கவினர் மாய உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர் எனவும் ஜூன் 4 கள நிலவரம் பாருங்கள் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றிபெறும் என்றார். தேங்காய் உற்பத்தி என்பது தமிழகம், கேரள,ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தான் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் கொடுப்பதாக தெரிவித்து,

இருந்தனர் ஆனால் கொடுக்கவில்லை மத்திய அரசு கொப்பரை தேங்காயை வாங்கி பாரத் தேங்காய் எண்ணெய் உருவாக்கி நாங்களே ரேஷன் கடையில் கொடுக்க உள்ளோம் என்றார்.தேங்காய் கொள்முதல் என்பது மாநில பிரச்னை இதற்கு மாநில அரசு செவி சாய்க்க போவதில்லை ஆகையால் பாரத் தேங்காய் திட்டம் கொண்டு வரப்படும் என்றார்.

தமிழகத்தில் இரண்டு இலக்கில் தேசிய ஜனநாயக கூட்டணி 10 ஐ தாண்டி ஒவ்வொரு நாளும் எழுச்சியால் 39 நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் எனவும் 25 இலக்கு வைத்து உள்ளதாகவும் கோவையில் பா.ஜ.க நம்பிக்கையாக வெல்லும் என சொல்வது போல் தமிழக அளவிலும் சாதகமாக வரும் என்றார். சிங்காநல்லூர்,பீளமேடு ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் எனவும் கோவை மத்திய ரயில் நிலையம் உலகம் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக தரம் உயர்த்தப்படும்,

என்றவர் வாரணாசி போல் கோவைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றார். தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ பணத்தை தண்ணீர் மாதிரி திமுகவினர் செலவழிப்பதாகவும் பண பலத்தை வைத்து தி.மு.க வெற்றி பெற போவதாக நம்புகிறது அதை உடைத்து நாங்கள் வெற்றிப் பெறுவோம் என்றார்.

Tags:    

Similar News