ராகுல் காந்தி பிறந்த நாள் - ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம்.

ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் எம்.பி ஜோதிமணி கலந்துகொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உண்டார்.

Update: 2024-06-20 04:19 GMT
 ராகுல் காந்தியின்  54 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய முழுவதும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில், கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வெள்ளியணை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கி பின்னர் அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இதில் கரூர் மாநகர் தலைவர் வெங்கடேஸ்வரன் மற்றும் வடக்கு நகர செயலாளர் ஸ்டீபன் பாபு , கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், வடக்கு நகர செயலாளர் பாலமுருகன், ஐடி விங் சாகுல் ஹமீத், கோகிலே, கண்ணப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News