ஆத்தூர்: திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-05-09 16:47 GMT

ஆத்தூரில் மழை

சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லாமல் வெயில் மட்டுமே கடுமையாக வாட்டி வதைத்து வந்தது. மேலும் கடந்த இரு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென பெய்த மழையால் அரை மணி நேரத்திற்கு மேலாக ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் வெப்பத்திலிருந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News