திருக்கோவிலூரில் ரகோத்தமர் ஆராதனை விழா
திருக்கோவிலூரில் ரகோத்தமர் ஆராதனை விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-23 15:29 GMT
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி
திருக்கோவிலுார், மணம்பூண்டி ரகோத்தமர் சுவாமிகளின் 451வது ஆராதனை விழாவின் 3ம் நாளான நேற்று மகா தீபாராதனை நடந்தது. பாவபோதகர் என போற்றப்பட்ட உத்திராதி மடத்தில் பீடாதிபதி ரகோத்தம சுவாமிகளின் மூல பிருந்தாவனம் திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டியில் அமைந்துள்ளது.
இவரது 451வது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு, விழாவின் 3ம் நாளான நேற்று அதிகாலை 4மணிக்கு பிருந்தாவனத்திற்கு நிர்மால்ய அபிஷேகம்,
5மணிக்கு ஸ்ரீ மூலராமர் சிறப்பு பூஜை, 7மணிக்கு பிருந்தாவனம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகாதீபாராதனை நடந்தது. மாலை 3 மணிக்கு மேல் உபன்யாசம், பஜனை சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.