ராமநாதபுரம் : வாக்கு எண்ணிக்கை துவக்கம்

ராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சற்று முன் துவங்கியது.

Update: 2024-06-04 03:14 GMT

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் வாக்கு என்னும் மையமான தேவிபட்டினம் செல்லும் வழியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.   2024 பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக நடைபெற்றது ஏழு கட்டமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடைபெற்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று நாடு முழுவதும் வாக்கு என்னும் பணி துவங்கியுள்ளது/

ராமநாதபுரம் மாவட்ட பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலைக்கழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பல்வேறு கட்ட சோதனைக்கு பின்னர் பல்வேறு கட்சிகளை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மருத்துவர்கள் என ஏராளமானோர் தற்போது வாக்கு எண்ணும் மையத்திற்குள் காவல்துறை அதிகாரிகள் அனுமதித்து வருகின்றன

முக்கியமாக உள்ளே செல்லக்கூடிய அரசியல் கட்சி பிரமுகர்களிடம் குறிப்பாக மொபைல் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை தற்போது ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு என்னும் மையத்தில் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பல்வேறு கட்ட சோதனைக்கு பின்னரே தற்போது ஒன்றின் பின் ஒன்றாக காவல்துறை அதிகாரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்ளே அரசியல் கட்சி பிரமுகர்கள் அரசு அதிகாரிகளை அனுப்பி வைக்கின்றனர்

Tags:    

Similar News