ராமநாதபுரம்: மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2023-12-07 13:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமேஸ்வரம் பாம்பன் தங்கச்சிமடம்  உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மீன் பிடிக்க தேவையான வலைகள், டீசல், ஐஸ் கட்டி, உணவு பொருட்கள் ஆகியவற்றை சேகரித்துக்கொண்ட மீனவர்கள், எட்டு நாட்களுக்குப் பிறகு மீன் பிடிக்க சென்றுள்ளனர். மீனவர்கள் கச்சத்தீவு அருகேமீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை ஒரு படகையும் அதிலிருந்த எட்டு மீனவர்களையும் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மீனவர்கள் எட்டு பேருக்கும் வரும் இருபதாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். சம்பவம் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News