ராமநாதபுரம் : கொசு புழு ஒழிப்பு மஸ்தூர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு கொசு புழு ஒழிப்பு மஸ்தூர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்தது.

Update: 2023-12-01 15:18 GMT

ஆர்ப்பாட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு கொசு புழு ஒழிப்பு மஸ்தூர்கள் சங்கம் சார்பில் மஸ்தூர்களுக்கு கலெக்டர் நிர்ணயிக்கும் ஊதியத்தை சீராக அனைத்து ஊராட்சியிலும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் பூரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், டிஎன்ஜிஇஏ மாவட்ட தலைவர் சௌந்தரராஜன், டிஎன்ஜிஇஏ மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், சுகாதார ஆய்வாளர் சங்க கூட்டமைப்பு மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர். இதில் ஏராளமான பணியாளர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News