ராமநாதபுரத்தில் இமானுவேல் சேகரனார் மணிமண்டம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா

தியாகி இமானுவேல் சேகரனாருக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம்  அமைக்க நடவடிக்கை

Update: 2024-02-16 18:43 GMT

முதலமைச்சர் முக ஸ்டாலின் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அரசின் சார்பில் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் பரமக்குடி சந்தைதிடல் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் முன்னிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்,  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழிசெல்வராஜ் தலைமையில் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி டெல்லி சிறப்பு பிரதிநிதி .ஏ.கே.எஸ்.விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா, முத்துராமலிங்கம், செ.முருகேசன், இராம.கருமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் இராஜா அவர்கள், பரமக்குடி சார் ஆட்சியர் செல்வி.அபிலாஷா கெளர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரவிந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் உதிசைவீரன், மாவட்ட ஊராட்சிகுழுத் துணைத்தலைவர் வி.வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர் டாக்டர்.எஸ்.சுந்தர்ராஜன் பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேதுகருணாநிதி, பரமக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், தியாகி இமானுவேல் சேகரனாரின்  வாரிசுகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News