ராமநாதபுரம் : மருத்துவமனையை சூழ்ந்த மழை நீர்

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மழைநீர் தேங்கி வெள்ள காடாக காட்சியளிக்கிறது.

Update: 2023-12-18 10:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மழைநீர் தேங்கி வெள்ள காடாக காட்சியளிக்கிறது. கழிவு நீர் மழைநீர் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. மகப்பேறு குழந்தைகள் நலபிரிவின் முன் தேங்கிய மழை நீரால் காலை நேரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்கு செல்லமுடியாமல் சிரம்ப்பட்டு வருகின்றனர். சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அழைத்துச் செல்வது உள்நோயாளிகளுக்கு தேவையான பொருள்களை எடுத்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பருவமழை தொடங்கிய காலம் முதல் தற்போது வரை மழை நீர் குளம்பு தேங்கி நிற்கிறது. இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என நோயாளிகள் கூறுகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை காண வரும் உறவினர்களும் நோய்வாய் ஏற்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
Tags:    

Similar News