ராமநாதபுரம்: கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

திருவாடானை அருகே காளி கோவில் உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-01-09 15:46 GMT

திருட்டு நடந்த கோவில் 

ராமநாதபுரம் மாவட்டம். திருவாடானை அருகே டி நாகினி கிராமத்தில் காளி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உண்டியல் உள்ளது இந்த உண்டியலை திருவிழா காலங்களில் திறந்து எண்ணுவது வழக்கம். மேலும் இந்த காளிக்கு 10 கிலோ வெள்ளி கவசமும் திருவிழாவின் போது சாத்தப்படுவது வழக்கம். இன்று கோவிலுக்கு சென்ற பார்த்த போது கோவில் உண்டியல் மர்ம நபர்களால் உடைத்து திருடப்பட்டுள்ளது.நல்வாழ்த்துக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருந்ததால் திருடு போகாமல் இருந்து. இது குறித்து திருவாடானை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவலின் பெயரில் திருவாடனை காவல் நிலையத்தார் விசாரித்தனர். அதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News