சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருப்பத்தூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-12-05 06:31 GMT

திருப்பத்தூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ப.முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த ஒன்பதாம் தேதி முதல் காணவில்லை என தாயார் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் கடந்த 11ஆம் தேதி புகார் அளித்தார். இந்த நிலையில் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கண்ணு மகன் கோவிந்தராஜ் வயது (40) என்பவர் 15 வயது சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்ததை அறிந்த கோவிந்தராஜ் கடந்த 19ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் அந்த சிறுமியை அழைத்து வந்து ஊருக்கு வெளியே நிற்க வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் இது குறித்து அந்த சிறுமி பெற்றோருக்கு தெரிவிக்கையில் சிறுமியை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது இதன் காரணமாக குற்றச்சாம்பவத்தில் ஈடுபட்ட கோவிந்தராஜை இன்று திருப்பத்தூர் கிராமிய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்தனர்.

Tags:    

Similar News