ராசிபுரம் ஒரு வழிச்சாலை பகுதியில் திடீர் பள்ளம்

ராசிபுரம் ஒரு வழிச்சாலை பகுதியில் திடீர் பள்ளம் உருவானதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-18 01:26 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக லேசான சாரல் மழை, மற்றும் கனமழை பெய்து வருகிறது. மேலும் சாலையில் மழைநீர் தேக்கம் அந்தப் பகுதியில் இருந்தது. இந்நிலையில் ராசிபுரம் டிவிஎஸ் அருகே உள்ள ஒரு வழிச்சாலை பூவாய் அம்மாள் திருமண மண்டபம் அருகே தண்ணீர் குழாய் உடைந்து திடீரென பெரும்பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் தண்ணீர் அதிக அளவில் சாலையில் ஓடியது தொடர்ந்து பெரிய பள்ளம் ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு மற்றும் இது சம்பந்தமான அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்து தொடர்ந்து பணியை மேற்கொண்டு வந்தனர். திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News