ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் பள்ளி - ஒவியப்போட்டி

ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் பள்ளி ஒவியப்போட்டி

Update: 2023-11-24 13:12 GMT

ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் பள்ளி ஒவியப்போட்டி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் பள்ளி ஒவியப்போட்டி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவியர்களுக்களுக்கான ஒவியப்போட்டி நடைபெற்றது. சித்திரம் பவுன்டேஷன் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்ட அளவில் சுமார் 70 பள்ளிகளை சேர்ந்த சுமார் 500 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 3-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் பங்கேற்று ஒவியங்கள் வரைந்தனர். காய்கறிகள், பழங்கள், மருதம், நெய்தல் போன்ற நிலக்காட்சிகள், பொங்கல், தீபாவளி விழாக்காலங்கள் போன்றவை குறித்த ஒவியங்கள் மாணவர்கள் வரைந்தனர். பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு சித்தரம் பவுன்டேஷன் தலைவர் ஜி.ஆர். மோகன் தலைமை வகித்தார். செயலர் சிவக்குமார் வரவேற்றார். இதில் ஜேசிஐ அமைப்பின் ராசிபுரம் கிளைத் தலைவர் ஜெ.ராஜேஸ், செயலர் கார்த்திக், வித்யாமந்திர் பள்ளி செயலர் வி.சுந்தரராஜன், முதல்வர் பி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற பதக்கங்கள், கோப்பைகள் வழங்கினர்.
Tags:    

Similar News