ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம்

பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம் இன்று நடைப்பெற்றது.

Update: 2023-12-09 08:27 GMT

பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம் இன்று நடைப்பெற்றது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

  தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம் இன்று நடைப்பெற்றது.

தமிழகத்தின் உள்ள அனைத்து தாலுக்கா அலுவலகங்களிலும் இன்று ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்குதல்,முகவரி மாற்றம், புதிய அலைபேசி எண் சேர்த்தல் அல்லது பழைய அலைபேசி எண் மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம், முகவரி மாற்றம் செய்யாமலே தங்கள் அருகில் இருக்கும் ரேஷன் கடையை மாற்றி கொள்ளுதல், அரிசி அட்டையை சர்க்கரை அட்டையாக மாற்றம் செய்தல், தொலைந்து போன பழைய ரேஷன் கார்டுக்கு பதிலாக புதிய மின்னணு நகல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட திருத்தங்கள் செய்ய ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் நாராயணமூர்த்தி தலைமையில் நடைப்பெற்ற இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு மேற்கண்ட திருத்தங்கள் தொடர்பாக மனு அளித்தனர். உரிய ஆவணங்களுடன் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனுக்குடன் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக வட்ட வழங்கல் அலுவலர் நாராயணமூர்த்தி தெரிவித்தார்.

Tags:    

Similar News