ரேஷன் அரிசி கடத்தியவர்கள் கைது
அனுமதியின்றி ரேஷன் அரிசி ஏற்றிய இருவர் கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-01 05:05 GMT
ரேஷன் அரிசி கடத்தியவர்கள் கைது
திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் நெல்லை தென்காசி சாலை உகந்தம்பட்டி விளக்கில் நேற்று இரவு வாகன தணிக்கை செய்தபோது அங்கு முத்து மற்றும் இசக்கி பாண்டி ஆகிய இருவரும் ரேஷன் அரிசி மூட்டைகளை ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்துக்கு ஏற்றி கொண்டிருந்தனர். அவர்களிடம் எந்த விதமான அனுமதியும் இல்லாததால் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.