இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் கூட்டம்

பள்ளிச் செல்லா இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் மூன்றடுக்கு குழு கூட்டம்

Update: 2024-01-02 16:55 GMT

பள்ளிச் செல்லா இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் மூன்றடுக்கு குழு கூட்டம்

பள்ளிச் செல்லா இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் மூன்றடுக்கு குழு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக, பள்ளிச் செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பாக, மாவட்ட அளவிலான மூன்று அடுக்கு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு தலைமையில் இன்று (02.01. 2024) நடைபெற்றது. உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பி. புஷ்பா, ஓசூர் சார் ஆட்சியர் செல்வி. பிரியங்கா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சீ. பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி. மகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்னர்.
Tags:    

Similar News