ரியல் எஸ்டேட் அதிபரின் தங்க சங்கிலி திருட்டு

சேலம் தாதகாப்பட்டியில் ரியல் எஸ்டேட் அதிபரின் தங்க சங்கிலி திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.;

Update: 2024-01-04 00:55 GMT

காவல் நிலையம் 

சேலம் திருச்சி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (45). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் தாதகாப்பட்டி வழிவாய்க்கால் காளியம்மன் கோவில் தைத்திருவிழா மற்றும் பொங்கல் விழா தொடர்பாக கடந்த நாட்களுக்கு முன்பு நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து கூட்டம் முடிந்த பின்னர் அவர் வீடு திரும்பினார். அப்போது அவர் அணிந்திருந்த 4½ பவுன் தங்க சங்கிலி திருட்டு போனது தெரியவந்தது. யாரோ மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News