எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-10 06:43 GMT

எரிந்த சடலம் மீட்பு 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டு விசாரிக்கின்றனர். கறம்பக்குடி அருகேயுள்ள ஓடப்பவிடுதி காட்டாறு பாலம் அருகே சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது.

தகவலறிந்து சென்ற ரெகுநாதபுரம் போலீஸார் அந்தச் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர் யார், எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News