பெண்ணாடம்: நிலத்தில் கிடந்த கோவில் உண்டியல்

பெண்ணாடம் அருகே நிலத்தில் கிடந்த கோவில் உண்டியல் மீட்பு

Update: 2024-03-02 17:29 GMT

 விசாரணை 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு சொந்தமாக கொத்தட்டை சாலை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இரும்பால் ஆன உண்டியல் ஒன்று சங்கிலியோடு கிடந்தது. இதுபற்றி அறிந்த பெண்ணாடம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று உண்டியலை கைப்பற்றினர். அதில் பணம் ஏதும் இல்லை. இதன் மூலம் மர்ம நபர்கள் ஏதோ ஒரு கோவிலில் திருடி பணத்தை எடுத்துக் கொண்டு உண்டியலை அங்கு போட்டு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News