தென்னையில் சிவப்பு கூண் வண்டு - ஆய்வு 

தென்னையில் சிவப்பு கூண் வண்டு தாக்குதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தோட்டக்கலைத்துறை ஆய்வு செய்தனர்.

Update: 2024-05-23 14:15 GMT

தென்னையில் சிவப்பு கூண் வண்டு தாக்குதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தோட்டக்கலைத்துறை ஆய்வு செய்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம்,  சேதுபாவாசத்திரம் வட்டாரம், இரண்டாம்புலிக்காட்டில் விவசாயி கமால் பாட்ஷா என்பவரது தென்னந்தோப்பில் சிவப்புக் கூண் வண்டு தாக்குதல் அதிகம் இருப்பதாக விவசாயிடமிருந்து பெறப்பட்டது.  இத்தகவலின் அடிப்படையில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வள்ளியம்மாள், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி மையத்திலிருந்து விஞ்ஞானி அருண்குமார்,  மற்றும் தோட்டக்கலை துணை அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட மரங்களை பார்வையிட்டு, தக்க நடவடிக்கை எடுக்க வழிமுறைகளை அறிவுறுத்தினர்.   மேலும், சிவப்பு கூண் வண்டு தாக்குதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளையும், தாக்குதல் ஏற்பட்டுள்ள மரங்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கிக் கூறினர்.
Tags:    

Similar News